தமிழ்ப் பேரவை
பங்கெடுத்த
சிங்கப்பூர்
எழுத்தாளர் விழா 2013
NUS Tamil Language
Society - A Friend of the
Singapore Writers’ Festival
2013
ஒவ்வொரு ஆண்டும் தேசிய கலை மன்றம் (National
Arts Council) சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவை
நடத்திக்கொண்டு
வருகிறது.
உலகில்
உள்ள
இலக்கிய திறன்களை ஒன்றிணைப்பதே இவ்விழாவின்
முக்கிய ந�ோக்கமாகும். ஆசியாவில் இவ்விழா மிகப்
பிரபலமாகவும் புகழ்வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது.
ஏனெனில், சிங்கப்பூர் பல இனம் சார்ந்த நாடாக
திகழ்வதால் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய
நான்கு
அதிகாரத்துவ
ம�ொழிகளிலும்
பற்பல
நிகழ்ச்சிகளை இயக்கி ஒருங்கிணைத்து மக்களிடம்
வழங்கப்படுகிறது.
இதுவே
இவ்விழாவின்
சிறப்பு
அம்சமாகும். சென்ற ஆண்டு 2013-ல், நவம்பர் மாதம்
1 முதல் 10 வரை சிங்கப்பூர் எழுத்தாளர் விழா
நடைபெற்றது.
சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப்
பேரவை இவ்விழாவின் தமிழ் கூறை மேடையேற்ற தன்
பணியை ஆற்றியது. தமிழவேள் க�ோ. சாரங்கபாணியும்,
பற்பல சிறந்த எழுத்தாளர்களும் தமிழ் முரசில் எழுதிய
சிறு கதை, கவிதைகளை த�ொகுப்பாக "இலக்கியம்
வளர்த்த தமிழவேள் சாரங்கபாணி" என்ற ஒரு புத்தகம்
தேசிய
கலை
மன்றத்தால்
வெளியிடப்பட்டது.
அக்கதைகளும்,
கவிதைகளும்
தமிழ்
ம�ொழியின்
அழகுணர்ச்சியையும்,
தன்மையையும்
மக்களுக்கு
எடுத்துக் காட்ட ஐந்து தமிழ்ப் பேரவை செயற்குழு
84
NUS Tamil Language Society
35th Executive Committee
உறுப்பினர்கள் நாடகம் வாயிலாக எடுத்துரைத்தனர்.
இக்கூறை நிகழ்த்த இராஜா அரவிந்த் ராஜ் நிகழ்ச்சி
த�ொகுப்பாளராக
இருந்தார்.
நா.
க�ோவிந்தசாமி
எழுதிய "கானல் நீர்" என்ற சிறு கதையை ரியாஸ்
அப்துல் ரஹீமும், அருணா அனந்த சயணமும் அழகிய
அபினையங்கள�ோடு நடித்து ப�ொதுமக்களை மெய்
மறக்க செய்தனர். ம கணேஷ்குமாரும், ம பிரகாஷும்
அச்சிறுகதைக்கு
உணர்ச்சியுடன்
எடுத்துரைத்தனர்.
அதன்பிறகு, ஐ. உலகநாதன் எழுதிய "ஏது விடுதலை"
என்னும் கவிதையை அருணா அழகாக வாசித்தார்.
தமிழவேள்
க�ோ.
சாரங்கபாணியின்
வரலாற்றையும் சிங்கப்பூரில் இந்திய சமுதாயத்தை
ஒருங்கிணைத்ததைப்
பற்றியும்
தமிழ்ப்
பேரவைத்
தலைவர் இர்ஷாத் முஹம்மது ஒரு கண்காட்சியை
உருவாக்கினார்.
இக்கண்காட்சிக்கு
அவர்
மேற்பார்வையாளராகவும் இருந்து ஒருங்கிணைத்தார்.
இக்கண்காட்சியைக்கண்டு
தமிழவேள்
க�ோ.
சாரங்கபாணி பற்றியும் அவரின் சாதனைகளைப் பற்றி
மேலும் தெரிந்துக�ொண்டதால் மக்களிடமிருந்து நற்பல
ஆதரவு கிடைத்தது.
தமிழ்
ம�ொழியை
பாதுகாக்கவும்
வளர்ப்பதற்காகவும் முன் வந்துள்ள இளைஞர்களின்
முயற்சியை
கண்டு
இச்செயல்திறனுக்கு
அதிக
அங்கீகாரமும் ஆதரவும் மக்களிடமிருந்து கிடைத்தது.
இது தமிழ்ப் பேரவைக்கு ஒரு பெரும் ஊக்குவிப்பாக
இருந்தது. இந்த பங்கேற்புக்கு வாய்ப்பளித்த தே